Thursday, June 30, 2011
Monday, June 27, 2011
சிறுகவிதைகள்
ஆடிய தாண்டவம் ஒய்ந்து
பாதங்கள் சிவக்க,வலிக்க
நடனத்திலிருந்து
நடைக்கு மாறுகிறார்
நட ராசர்.
இதைதந்திபோல் பாவித்து
உடனே கிளம்பு என்றிந்தது
அப்பா அனுப்பியிருந்த
ஈமெயில்செய்தியில்.
நள்ளிரவில் கனவு வந்தது
சிறு இடைவேளைக்குப்பிறகு
மீண்டும்
தொடருமென்றது.
எப்படி நிகழந்தது என்று தெரியவில்லை.
தெரிந்த பிறகும் நிகழந்தது அது.
Monday, June 20, 2011
பிறந்த மண்
மணல் குன்றில்
விளையாடுகின்றன குழந்தைகள்.
மலை ஏற்ற வீரர்களைப்போல்
அதன் உச்சியில் ஏற
நெகிழ்ந்து மண் சரிய
சிரிக்கின்றன .
மணலில் மலை செய்து
அதில் குகைகளைக்குடைந்து
கூழாங்கற்களை வாசலுக்குப்பதிக்கின்றன
மணலில் சித்திரங்களை,பெயர்களை
வரைந்து அழிக்கின்றன.
மணலில் செடியை நட்டு
நீர் வார்க்கின்றன.
அதட்டும் அழை குரல் அவசரத்தில்
எழும் குழந்தைகளின் மடியிலிருந்து
கொட்டங்குச்சி ஈரமண் இட்லிகள்
வீழந்து உடைகின்றன.
குழந்தைகளின் கால்களை
மணல் அலைகள் தழுவிக்கொள்கின்றன.
வீடு மீளும் குழந்தைகளின் உடலில்
பிரிய மறுத்த மணற்த் துகள்கள்
பிறந்தமண்போல் ஒட்டிக்கொள்கின்றன.
Wednesday, June 15, 2011
Thursday, June 2, 2011
பொய்யின்சித்திரம்
முடிவற்ற இரவு தொடங்குகிறது.
கிளர்வூட்டிய தனிமை
மறைவிடங்களைத் தேடுகிறது.
நன்நடத்தை
அவசரகதியில் பலவீனமடைகிறது.
தினருசி
ஒருபுதியஇரையை சுவைக்கிறது.
பிறகு
குற்றஉணர்ச்சியில் வெட்கித்தலைகுனிகிறது.
எல்லாம் சரிசெய்யப்பட்டுவிட்டவிடியலில்
ஜன்னலிருந்து கதவிற்க்கும்
கட்டிலிருந்து பின்வாசலுக்கும்
ஒரு பொய்யின்சித்திரத்தை வரைகிறது
Wednesday, June 1, 2011
Subscribe to:
Posts (Atom)