இறந்து போகிற துயரங்கள் என்றுமிருந்ததில்லை. மீண்டும் மீண்டும் சுடரிடம் சொல்ல ஏதோ
இருந்திருக்கின்றது ஈசல்களுக்கு.
சுடரிடம் நான் கற்றுக்கொண்டது அணையும் வரை தன் நடனத்தை வசீகரத்தில் வைத்து கொள்வது. மெழுகுவர்த்தியிடம்
கற்றுக்கொண்டது
அணைகிற வரை
சுடரின் நடனத்திற்கு
உருகுவது.