Thursday, March 15, 2012
Thursday, March 8, 2012
ஒருகணச் சிற்றசைவு
மாலை வேளை
நீ அருந்தக் கொடுத்த
தேநீரில் அவ்வளவு சுவை
மெதுவாக ஆரம்பித்த பேச்சில்
அப்படியொரு அணுக்கம்
ஒரு கணத்து சிறு அசைவு
எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது
வருடிக்கொடுத்த விரல்களை
அவ்வளவு வெடுக்கென்று
விலக்கி கொள்ளதிருக்கலாம் நீ
யாருமற்ற வாசல் நிலைப்படியில்
நின்றவாறு
நீ விடை கொடுத்தத்தருணம் கூட
அதற்க்கு வாய்த்திருந்தது
அப்பொழுதேனும்
நாம் முத்தமிட்டு கொண்டிருக்கலாம் .
நன்றி உயிர்மை இதழ்
Wednesday, March 7, 2012
Subscribe to:
Posts (Atom)