Thursday, March 15, 2012

சிறது தூரம்தான்


பிறந்த குழந்தையை 
பிரசவ வார்டிலும்
 
இறந்த முதியவரை 
மார்ச்சுவரியிலும்   
 
ஒரே தினத்தில் 
பார்த்து வர நேர்ந்தது
 
வீடு திரும்புகிறேன்
 பேரதிர்ச்சியோடு 
சிறது தூரம்தான்
வந்த இடத்திலிருந்து 
செல்கிற இடத்திற்கு 




4 comments:

Unknown said...

// சிறது தூரம்தான்
வந்த இடத்திலிருந்து
செல்கிற இடத்திற்கு //

தத்துவ தரிசனம் நெகிழ வைத்தது!

ரவிஉதயன் said...

நன்றி தியாகு

vasan said...

"வாழ்வே சிறிது தூர‌ம் தான்"
தூர‌ம் அவ‌ரவ‌ர் வ‌லிமை சார்ந்த‌து.
தூர‌ம் அதிக‌மில்லா வாழ்வில்
துய‌ரமும் அதிக‌மில்லை
மிக‌ அருமையான வ‌ரிக‌ள்.

ரவிஉதயன் said...

நன்றிவாசன்