Thursday, March 8, 2012

ஒருகணச் சிற்றசைவு








மாலை வேளை
நீ அருந்தக் கொடுத்த
தேநீரில் அவ்வளவு சுவை 


மெதுவாக ஆரம்பித்த பேச்சில் 
அப்படியொரு அணுக்கம் 


ஒரு கணத்து சிறு அசைவு 
எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது 


வருடிக்கொடுத்த விரல்களை 
அவ்வளவு  வெடுக்கென்று
விலக்கி கொள்ளதிருக்கலாம் நீ 


யாருமற்ற வாசல் நிலைப்படியில்
நின்றவாறு
நீ விடை கொடுத்தத்தருணம் கூட 
அதற்க்கு வாய்த்திருந்தது


அப்பொழுதேனும்
நாம் முத்தமிட்டு கொண்டிருக்கலாம் .


நன்றி உயிர்மை இதழ்  


2 comments:

Unknown said...

ஒருகணச்சிற்றசைவு - உயிர்மையில் வாசித்தபோதே அசைத்துப்பார்த்தது.
இப்போது உங்கள் இடுகையிலும் காண்கிறேன். அன்பு வாழ்த்துகள் திரு.ரவி உதயன்!
உங்களின் வலைப்பூ என் மனம் கவந்தது.

ரவிஉதயன் said...

ஒரு கவிதை சிலஇதயங்களை அசைத்திருப்பது மகிழ்ச்சி. வாழ்த்துக்கு நன்றி தியாகு
கவிதையில் வாழ்வோம். வானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை மேலும்
சில வண்ணங்களைச் சேர்க்கட்டும்