Wednesday, July 27, 2011

பாண்டியாட்டம்.


சீதைக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை
பாண்டியாட்டம்.
லட்சுமணன்
கிழித்தக் கோட்டை
தொடாது
தாண்டி குதிப்பதெப்படியென்று.

Tuesday, July 5, 2011

ஈரோடு சி.கே .கே அறக்கட்டளையின் இலக்கிய விருது








ஈரோடு சி.கே .கே அறக்கட்டளையின்  இலக்கிய விருது மற்றும் இருபத்தி ஐந்தாயிரம் ரொக்கம்
 இந்த வருடம் எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இடம் ஈரோடு வடிவு சுப்பிரமணியம் திருமண மண்டபம் ஈரோடு
நாள் 24 .07 .2011  ஞாயிறு. காலை10 .30 க்கு கவியரங்கம். மாலை 4 .00 மணிக்கு இலக்கிய விருது மற்றும் கருத்தரங்கம். நடைபெற இருக்கிறது.தமிழருவி மணியன்,சுப வீரபாண்டியன் அப்துல் காதர் மேலும் பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.  அனைவரும் வருக.