Wednesday, July 10, 2013

ஒரு ரோஜா செடியின் கீழ்










பூ விரிவது போல 
குருதி பெருகுகிறது. 
நறுமணத்தைப்போல
வலி பரவுகிறது. 
பிரிந்த பின்னே
நீ நட்ட 
ஒரு ரோஜா செடியின் கீழ்
என்னால்
இப்படிதான்
இருக்க முடிகிறது!