Thursday, June 2, 2011

பொய்யின்சித்திரம்







முடிவற்ற இரவு தொடங்குகிறது.

கிளர்வூட்டிய தனிமை
மறைவிடங்களைத் தேடுகிறது.

நன்நடத்தை
அவசரகதியில் பலவீனமடைகிறது.

தினருசி
ஒருபுதியஇரையை சுவைக்கிறது.

பிறகு
குற்றஉணர்ச்சியில் வெட்கித்தலைகுனிகிறது.

எல்லாம் சரிசெய்யப்பட்டுவிட்டவிடியலில்

ஜன்னலிருந்து கதவிற்க்கும்

கட்டிலிருந்து பின்வாசலுக்கும்

ஒரு பொய்யின்சித்திரத்தை வரைகிறது

No comments: