முடிவற்ற இரவு தொடங்குகிறது.
கிளர்வூட்டிய தனிமை
மறைவிடங்களைத் தேடுகிறது.
நன்நடத்தை
அவசரகதியில் பலவீனமடைகிறது.
தினருசி
ஒருபுதியஇரையை சுவைக்கிறது.
பிறகு
குற்றஉணர்ச்சியில் வெட்கித்தலைகுனிகிறது.
எல்லாம் சரிசெய்யப்பட்டுவிட்டவிடியலில்
ஜன்னலிருந்து கதவிற்க்கும்
கட்டிலிருந்து பின்வாசலுக்கும்
ஒரு பொய்யின்சித்திரத்தை வரைகிறது
No comments:
Post a Comment