Tuesday, March 29, 2011
Monday, March 28, 2011
காதல்காலம்
விடியல்
இரவை முடித்து வைக்கிறது
இளங்காலையை
நண்பகல் பின்தொடர்கிறது,
பொன்மாலை
யாருக்கோ காத்திருக்கிறது?
நள்இரவு
எல்லாவற்றையும் அணைத்துக்கொள்கிறது
Sunday, March 13, 2011
Friday, March 11, 2011
சிறு வாழ்வு சிறு பயணம்
அணுப் பிளந்து
உயிர் நிரப்பி
கருவறைச்சுவருடைத்து
உலவ விடுகிறது அன்னையின் அருள்.
நனைத்து விடுகிறது மழை
உலர்த்திவிடுகிறது வெய்யில்
சிறகுகள் ஈந்து
பறக்க விடுகிறது காற்று
குளிர் மடிதருகிறது வேம்பின்நிழல்
சற்றதிக நேரங்கூடஎடுக்க
விருப்பமில்லை ஒய்வை
களைத்துப் போகும் முன்
வாழ்ந்து விடுவோம்
இச்சிறு வாழ்வை.
-ரசனை மார்ச்மாத இதழில் வெளியான கவிதை
Monday, March 7, 2011
காதலென்பது காதலே
காதல்
குடை மறந்து
மழை பிரசங்கம் கேட்பது. தேன் துளிகளை
பழுக்க வைத்து
கனியாக்கி உதிர்ப்பது.
நட்சத்தித்திரங்களை ஊட்டுவது.
ஒவ்வொரு சொல்லுக்கும்
எல்லாவற்றையும் தாரை வார்ப்பது.
ஏழு கடல் ஏழு மலை தாண்டி
ஒருபூவை மட்டும்பறித்துவருவது
நகர எல்லையில்
விட்டு வந்தும்
வழி தடம் முகர்ந்து
வீடு வந்து சேர்வது.
வசைகளுக்கும் நடுவே
இசை பட வாழ்வது .
உதட்டு மின்கம்பிகளில்
முத்தங்களை கடத்துவது.
Saturday, March 5, 2011
தன்னிலை விளக்கம்
அதற்கு எதன் மீதும் புகாரில்லை
அது புலம்பவில்லை
அதற்கு கோபமில்லை
அது எவரையும் சபிக்கவில்லை
அதற்கு எவ்விதப் பிடிப்புமில்லை
அது எதிர்பார்த்தது அன்பின் கருணையை
அது நிராகரிப்பின் அவமானத்துடனே திரும்புகிறது
அது தனக்குதானே தீர்ப்பளித்துக்கொண்டு
தாய்நூலை அறுத்துக்கொண்டகாற்றாடிபோல
போய் விட்டது .
( மார்ச் மாத ரசனை இதழில் வெளியான எனது கவிதை )
நீ அறியும் பூவே
அத்தனை பெண்களின்
கண்களும் அதன்மீதுதான் !
சடைப் பாம்புகள்
தரை தீண்டத் துடிக்கும்.
இத்தனை முடிஆகாது வீட்டிற்கு என்பாள்
தலைவாரி விடும் அம்மாதினமும்.
ரோஜா,
கனகாம்பரம்,
சிலபொழுது மனோரஞ்சிதம்,
எப்பொழுதும் சிறு மல்லிகை இணுக்கு.
இவற்றைத் தின்று வளர்கிறது
என் கருங்கூந்தல்.
(இம்மாத ரசனை இதழில் வெளியான எனதுஒருகவிதை)
Subscribe to:
Posts (Atom)