Friday, March 11, 2011

சிறு வாழ்வு சிறு பயணம்








அணுப் பிளந்து
உயிர் நிரப்பி
கருவறைச்சுவருடைத்து
உலவ விடுகிறது அன்னையின் அருள்.


நனைத்து விடுகிறது மழை

உலர்த்திவிடுகிறது வெய்யில்

சிறகுகள் ஈந்து
பறக்க விடுகிறது காற்று

குளிர் மடிதருகிறது வேம்பின்நிழல்

சற்றதிக நேரங்கூடஎடுக்க
விருப்பமில்லை ஒய்வை
களைத்துப் போகும் முன்
வாழ்ந்து விடுவோம்
இச்சிறு வாழ்வை.

  -ரசனை மார்ச்மாத இதழில் வெளியான கவிதை

No comments: