ரவிஉதயன்
Friday, September 14, 2012
உறக்கத்தின் மீது.
நெடுஞ்சாலையோரத்தில்
ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறார்கள்
நடை பாதைவாசிகள்.
அவ்வுறக்கத்தின் மீது
ஓடிக்கொண்டிருக்கின்றன
எண்ணற்ற வாகனங்கள்.
ஒரு வினாடி
வெறுப்புத்தோன்றி மறைகிறது.
விழித்தபடிவாகனம்
ஓட்டுபவர்களுக்கு
உறங்கும்நடை பாதைவாசிகளின்
உறக்கத்தின் மீது
.
நன்றி -நவீன விருட்சம்
Monday, September 10, 2012
விழிப்பறவை
சன்னலைத் திறந்து
உன் பார்வை
இரையெடுக்க இறங்குகிற
பறவை போல்
என்னுள்இறங்குகிறது.
பதுங்கி ஓடாது
தன்னை ஒப்புக்கொடுக்கும்
இரையை
கொத்தித்தின்னாது
கீறிப்பறக்கிறது
உன் விழிப்பறவை.
நன்றி நவீன விருட்சம்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)