ரவிஉதயன்
Thursday, April 29, 2010
செய்தி
பிரிக்கப்படாததபாலில்இருககிறது
பிரிக்கப்படாதஉன்உதடுகள்
Wednesday, April 28, 2010
பருவகாலங்கள்
சூடான தேநீரை
ஊதி,ஊதித்தருகிறாள்
தாய் சிறுமிக்கு
கோடையும்
குளிரும்
வந்து வந்து போகின்றன
அச்சிறிய தேநீர்கடைக்கு
Sunday, April 25, 2010
விரிந்த சிறகு
காற்றுக்கு அசைகிறது
இறந்த பறவை
பறந்தபடி இருக்கிறது
மரணத்தின் மீது
Saturday, April 24, 2010
பிடிபட்ட கள்வன்
களவுப்பொருட்களின் நடுவே
கரடிபொம்மை
Friday, April 23, 2010
வாசல்
மீன் கோலம் துடிக்கிறது
நீ தெளித்த நீர்வற்றி
Thursday, April 22, 2010
சிறகு
சிறகுமுளைத்த எறும்புகள்
எறும்புகளின்தேவதைகள்
Wednesday, April 21, 2010
உறவு முறித்து
பிரிந்த கணம்
காற்றில்செதுக்கிறாள் சிலுவைகளை
நேசித்தக் கடவுளுக்கும்
நிராகரித்தக்காதலனுக்கும்
Monday, April 19, 2010
முறிகிற கிளைகிளையிலிருந்து
சடாரென்று
இறகு நீண்டுபறக்கிறது
ஒரு பசிய இலை
Friday, April 16, 2010
பிரிதுயர்
நேற்று
இறந்து
விட்டான்
இன்று
பண்டிகை
நாளை
இறந்து
இருக்கலாம்
maatru
Wednesday, April 14, 2010
ரசனை
ஒரே தருணத்தில் வந்து அமர்ந்தோம்
நானும் பட்டாம்பூச்சியும்
அந்தப் பூவில் .
Tuesday, April 13, 2010
பார்வை
அன்பே
பெண் குயீன் பறவை நீ.
வாழ்வு
காலம்போனதுதெரியவில்லை
நேரம் வந்ததும் அறியவில்லை
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)