Monday, June 18, 2012

மழைப்பாடல்




காற்று வீசுகிறது
மரம் தலையசைக்கிறது
இலைகள் கைத்தட்டிச்சலசலக்கின்றன
நெடிய சாந்தம்
பிறகுதான் ஆரம்பித்தது
மழை தன்மகத்தான பாடலை

Sunday, June 10, 2012

நாம் பறவை மரம்




கிளைஅதிர
எழும்பிப்பறக்கின்றது பறவை

கிளையிலிருந்து
உதிர்கின்றது ஒரு இலை,
அதன்சிறகிலிருந்து
உதிர்கின்றது ஒரு இறகு

இலை
நமது
இருப்பிற்கான ரசீது
இறகு
நாம்
பறப்பதற்கான பயணச்சீட்டு

Tuesday, June 5, 2012

ஈரோடு சி.கே .கே அறக்கட்டளை இலக்கிய விருது






                           ஈரோடு சி.கே .கே அறக்கட்டளையின்  இலக்கிய விருது மற்றும் இருபத்தி ஐந்தாயிரம் ரொக்கம்  இந்த வருடம் எழுத்தாளர்ஜெயமோகன்  அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இடம் ஈரோடு வடிவு சுப்பிரமணியம் திருமண மண்டபம் ஈரோடு நாள் 29 .07 .2012  ஞாயிறு. காலை10 .30 க்கு கவியரங்கம். மாலை 4 .00 மணிக்கு இலக்கிய விருது மற்றும் கருத்தரங்கம். நடைபெற இருக்கிறது.எழுத்தாளர் பிரபஞ்சன், கரு ஆறுமுக தமிழன் இறையன்பு I A S  ,. வெண்ணிலா,மரபின்மைந்தன்    மேலும் பல இலக்கிய ஆளுமைகள்கலந்து கொள்ள இருக்கிறார்கள்.  அனைவரும் வருக.