ரவிஉதயன்
Wednesday, February 6, 2013
கல் எறிந்தவர்கள்
பிளாட்பாரத்திலிருந்து
பிரிகிறது ரயில்.
ஒரே தருணத்தில்
சில நூறு கரங்கள் உயர்ந்து
கையசைக்கின்றன
சட்டென
எழும்பிப்பறக்கின்ற
பறவைகள் போல!
கல் எறிந்தவர்கள்
கண்களிருந்து
மெதுவாகக் காணாமல்
போகிறார்கள்.
நவீன விருட்சத்தின் 92 வது இதழில் வெளியான எனது கவிதை.
Monday, February 4, 2013
உன் பிரிவு
நேற்று வரை
நீ இருந்து
நிறைத்ததை
இன்று
உன் பிரிவு வந்து அருந்துகிறது.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)