Saturday, March 5, 2011

தன்னிலை விளக்கம்










அதற்கு எதன் மீதும் புகாரில்லை
அது புலம்பவில்லை
அதற்கு கோபமில்லை
அது எவரையும் சபிக்கவில்லை
அதற்கு எவ்விதப் பிடிப்புமில்லை
அது எதிர்பார்த்தது அன்பின் கருணையை
அது நிராகரிப்பின் அவமானத்துடனே திரும்புகிறது
அது தனக்குதானே தீர்ப்பளித்துக்கொண்டு
தாய்நூலை அறுத்துக்கொண்டகாற்றாடிபோல
போய் விட்டது .



( மார்ச் மாத ரசனை இதழில் வெளியான எனது கவிதை )

1 comment:

எண்ணங்கள் 13189034291840215795 said...

ரொம்பவே வித்யாசமான கவிதை