Monday, October 8, 2012

நீரின் வரைபடம்

   




 உணவு மேசையில்
சிந்திய நீரில்
வரைந்து காட்டிக்கொண்டிருகிறாய்
உனது வீட்டிற்கான
வழித்தடங்களை

விரல்கள்வரைந்துகொண்டிருந்த
கோடுகளின் பாதைகளில்
உனக்கு முன்னே
உன் வீட்டை அடைந்திருந்தது
சிந்திய அந்நீர்த்துளி  


(இம்மாதஉயிர்மை  இதழில் வெளியான எனது கவிதை) 

No comments: