Wednesday, October 24, 2012

உரையாடலின் சாம்பல்.







நமது உரையாடலுக்குநடுவே 
இருமீன்கள் 
நீந்தியபடியேஇருந்தன 

இடவலமாக ஒருபறவை
பறந்துபோனது

அந்தி மந்தாரையிலிருந்து
ஒருஇதழ்
தரைக்கு மிதந்துவருகிறது

இதுவரை
நான்கு தேன்நிற
தேநீர்க்கோப்பைவட்டங்களை
மேசையில் விட்டுச்சென்றிருந்தான்
டீக்கடைச்சிறுவன்

காலடியின்கீழ்
உதிர்ந்துகிடந்தன
நமதுஉரையாடலின் சாம்பல்.





(இம்மாதஉயிர்மை  இதழில் வெளியான எனது கவிதை) 

No comments: