Monday, October 1, 2012

ரேகைகளை வாசிப்பவன்

 

விரிந்த 
உள்ளங்கையில் 
ரேகைகளின்தடங்களை உற்றுநோக்குகிறான் 

மேடுகளை நீவி
பள்ளங்களில் நிரப்புகிறான்

செடி வேர்கள் போல
கிளை பிரிந்து செல்லும்
ரேகைகளின் பாதைகளில்
ஒரு சிற்றெம்பைப்போல்
ஊர்கிறான்


அன்றாடச்சுமையோடு
உள்ளங்கைக்கதவைத்திறந்து
உள்ளே இருப்பவனிடம்
யாசிக்கிறான்
தன்
ஒரு கவளச்சோற்றுப்பசிக்கு

No comments: