Monday, November 7, 2011

விலகா நினைவு




எப்பொழுதும்
எங்கள்நெஞ்சில்துஞ்சியகுழந்தையை
மண்அடுக்குகளின் கீழ்
புதைத்து விட்டு
வெறுமையோடு
வீடுதிரும்புகிறோம்
மயானத்திலிருந்து.
தோள்களில் இன்னும் ஊர்கிறது
எறும்பைப்போல

குழந்தையின்
மெல்லிய மூச்சுக்காற்று.
(நன்றி திண்ணை இணைய இதழ்) 



No comments: