Thursday, November 3, 2011

ஒரு சொல் சில சந்தேகங்கள்







ஒரு சொல் இதயத்தைத் துளைக்கிறது

ஒரு சந்தேகம் நிழல் போல்த்தொடர்கிறது

ஒரு சந்தர்ப்பம் உறுதியைக்குலைத்து விடுகிறது

ஒரு பெருமுச்சு அனைத்தையும் பேசிவிடுகிறது

ஒரு கண்ணீர்த்துளிசில கப்பல்களைக் கவிழ்த்துவிடுகிறது
  
ஒரு குற்றம் மன்னிப்பை மலினப்படுத்துகிறது

ஒரு பொய் தன் நாவை அறுத்துக்கொள்கிறது
  
ஒரு குழந்தைஇதயம் எல்லாவற்றையும் நம்பிவிடுகிறது

ஒரு ஆசை அடங்குகையில் ஆநித்திய ஆசைகளை எழுப்பிவிடுகிறது.


 இம்மாத (நவம்பர்) உயிர் எழுத்து இதழில் வெளியான எனது ஒரு கவிதை 

No comments: