Tuesday, November 1, 2011

குறுவாளின் கதை




அதில் காய்களை
உரிக்கிறாய்
பழங்களை
துண்டுகளாக்குகிறாய்

பால்கட்டிகளை,
கேக்குகளை
நேர்த்தியாய் அதில்
பிளக்கிறாய்

 அதன் பளபளப்பில்
 முகங்கண்டு மகிழ்கிறாய்

  கன்னத்தில் அழுத்தி
 அதன் குளிர்ச்சியை உணர்கிறாய்

அது
உனக்கெப்போதும்
உரைத்ததேயில்லை
ஆதியில்  
குருதி பருகிவளர்ந்த
குறுவாளென்ற கதையை.