Wednesday, November 9, 2011

ஒரு விதை விழுகிற இடத்தில்






 ஒரு விதை
விழுகிற இடத்தில்
பூமி நெகிழ்ந்து கொடுக்கிறது

காற்று
அவ்விதைக்கு
ஜீவனைஅளிக்கிறது

முகில் கூட்டம்
மழையை அனுப்புகிறது

கதிரவன்
வெதுவெதுப்பைத்தருகிறது
 
அந்த இடமே
பரிசுத்தமாகிறது

பிறகு
அங்கு ஒரு பிரசவம் நிகழ்கிறது