Tuesday, May 24, 2011

பம்பரம்2









மிருதுவாக்கிய அடி நுனி ஆணியை 
நடுநாக்கில் தொட்டெடுத்து
சொடுக்கிச் சுழற்ற
தரையில் மிதக்கிறது வண்ணக் குமிழி. 
சாட்டைக் கையிற்றில் 
எத்திஎடுத்து உள்ளங்கையில் விடுகிறான்.
அட்சய ரேகையிலிருந்து 
இடம் மாறி 
சிறுவனது ஆயுள்ரேகையின் மீது பயணிக்கிறது 
சுழலும் பூமிப்பம்பரம் 

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

...சூப்பர்...

வேரென்ன சொல்ல...

ரவிஉதயன் said...

நன்றி சௌந்தர்