Monday, May 23, 2011

பம்பரம்1






ஒருசுற்று மறுசுற்று
கழுத்திலிறுக்கிச் சுற்றுகிறான்
கயிற்றை சிறுவன்.

குளிர்பான மூடியோடு
கயிற்றின் நுனி 
விரல் இடுக்கில் முடிகிறது.
 
விர்ரென்று...காற்றில்
கயிற்றைச்சொடுக்குகிறான்.
விடுபட்டுத்தரையில்
பல நூறுசுற்றுக்கள் சுற்றி 
துடித்தடங்குகிறது 
பம்பரத்தின் உடல்.
  

No comments: