Friday, April 15, 2011

வந்த விமர்சனம்






கவிதைத் தொகுப்பு
கிடைக்கப் பெற்றேன்.

வருத்தங்கொள்ள வைத்தது. 
வருகிற வழியிலேயே
அது புழங்கப்பட்டிருந்தது தெரிந்து.

முதல் பக்கத்திலேயே 
தேநீர் சிந்திய தடயங்களிருந்தது
.
சில பக்கங்கள்
மடங்கியிருந்தது.

முனை மழுங்கியிருந்தது
.
பின் அட்டை புகைப்படத்தில்
உன் முகத்தில்
கவலைரேகை படர்ந்திருந்தது.

மற்றபடி
தொகுப்பு கிடைக்கப்பெற்றேன்.
 நன்றி வணக்கம்

2 comments:

க ரா said...

ரசித்து படிக்க உங்கள் கவிதையும் கிடைத்தது .. நன்றி :)

ரவிஉதயன் said...

நன்றி இராமசாமி