கவிதைத் தொகுப்பு
கிடைக்கப் பெற்றேன்.
வருத்தங்கொள்ள வைத்தது.
வருகிற வழியிலேயே
அது புழங்கப்பட்டிருந்தது தெரிந்து.
முதல் பக்கத்திலேயே
தேநீர் சிந்திய தடயங்களிருந்தது
.
சில பக்கங்கள்
மடங்கியிருந்தது.
முனை மழுங்கியிருந்தது
.
பின் அட்டை புகைப்படத்தில்
உன் முகத்தில்
கவலைரேகை படர்ந்திருந்தது.
மற்றபடி
தொகுப்பு கிடைக்கப்பெற்றேன்.
நன்றி வணக்கம்
2 comments:
ரசித்து படிக்க உங்கள் கவிதையும் கிடைத்தது .. நன்றி :)
நன்றி இராமசாமி
Post a Comment