Tuesday, April 5, 2011

குறுங்கவிதைகள்







பூவின் சித்திரத்தை
மண்ணில் பதித்தப்படியே
நடக்கிறது பூனை.


ஈரச்சாலை
ரப்பர் செருப்பின் தாளலயம்
வெள்ளைவேட்டியில்
சேற்றுப்பூக்கள் மலருகின்றன.


வரிசையாகக் கனிந்தது
உதிர்கின்றன
கம்பி மரத்திலிருந்து
நீர்க்கனிகள்.


மெலிய உதடுகளின் மேல்
பற்கள் நடந்து போன
கால் தடம்.



சாரலக்குபின் மழை
முத்ததிறக்குப்பின் புணர்ச்சி.

No comments: