Saturday, April 16, 2011

மறதி







மறதியில்
மாற்றி அணிந்து கொள்கிறோம்
அடுத்தவர் மிதியடிகளை.

பூட்டிய கதவுகளுக்கு எதிரே
இழந்து தவிக்கிறோம்
மறந்து தொலைத்த சாவிகளை.

மறந்து நுழைந்து விடுகிறோம்
அடுத்தவர் அறைகளில்.

கை மறதியில் வைத்து விட்டு
புரட்டிப்போடுகிறோம்
அடி முதல் நுனி வரை.

வழிக் குருடில்
வந்து சேர்ந்து விடுகிறோம்
உலகின் விளிம்புகளுக்கு.

மீளாதமறதியில்
மீண்டுபோய் விடுகின்றன
நாம்சேர வேண்டிய இடங்கள்.  



No comments: