Monday, December 27, 2010

புழுவைப் போலவே, புழுவின் தடத்தில்

சிறு எறும்புகள் சேர்ந்து

ஊர்ந்து செல்கிற புழுவைச்சாய்க்கின்றன.

கவிழ்ந்தபுழு  இறந்தது போல

சுருண்டு நடிக்கிறது.

விடாது எறும்புகள்

மொய்த்துக் கொல்கின்றன

புழு வேதனையில்

புழுவாய்த்துடித்துச் சாகிறது

கண்களுக்குத் தெரியா

எறும்புகளின் வாய்கள்

புழுவின் தசைகளை

அரித்துத் தின்கின்றன

பிறகு

கருணையின் தூதுவர்கள் போல்

எறும்பின்சாரைகள்

புழுவைப் போலவே, புழுவின் தடத்தில்

ஊர்ந்து செல்கின்றன

இன்னொருபுழுவைத்தேடி

 

நன்றிதிண்ணை .காம்

No comments: