Monday, December 27, 2010

வலியெனப்படுவது

சொல்ல நினைத்ததை
 சொல்லத் தயங்கித்  
துடிக்கும்   உதடுகள் .

உறவுகள்
பிரியும் தருணம்  
விலகும்  பெருமூச்சு.

அருந்திய விஷக்கோப்பையில்
  மீந்திருக்கும்
 .இரு கண்ணீர்த்துளிகள்.

இல்லையென்று  விரிக்கும் கரங்களில்
ஒட்டி  கொண்டிருப்பவைகள்

இருக்கிறதென்று
தேடும் போது
விட்டு விலகுபவைகள்.

2 comments:

sathishsangkavi.blogspot.com said...

..இருக்கிறதென்று
தேடும் போது
விட்டு விலகுபவைகள்..

உண்மைதான்...

ரவிஉதயன் said...

நன்றி சங்கவி