Wednesday, June 23, 2010

கழுவும் கைகள்











உங்களுக்கு உகுக்கவேண்டியக்கண்ணீர்த்துளிகள்

ஆவியாகிவிடுகின்றன

உங்கள் உரிமைக்கு உயர்த்தபடவேண்டிய கைகள்

ஒன்றையொன்று கழுவிக்கொள்கின்றன

உங்களை ஆற்றுப்படுத்தச்சொல்லவேண்டிய சொற்கள்

சிறுமூச்சாய் வெளியேறுகிறது

உங்களுக்குச்சிந்தப்படவேண்டிய சகோதரக்குருதி

உள்ளுக்குள் உறைந்துவிடுகிறது

இதுவரை நாங்கள் பார்த்துக்கொண்டிருப்பது

வீழ்ந்த எங்களின்நிழல்களின் பேரழிவை

செவிட்டூமையாகப் பிறந்து

தன் பார்வையையும் இழக்கத்தொடங்குகிறது

இந்தகவிதையும்    எங்களைப்போல


           keetru.com ல்வெளியானது

No comments: