கத்தும் கன்றுகளைக்கடந்து
பசியபுல்வெளியைக் கடந்து
வைக்கோல் போர்களைக்கடந்து
அருந்திக் குளித்துமகிழ்ந்த
குளத்தைக்கடந்து
வீழ்ந்தமரத்தில்
தான்வாழந்த இடத்தை
வெறித்து நோக்குகிற
ஒரு பறவையைப்போல்
விழி பிதுங்கி நுரைசிதற
அசை போட்டவண்ணம்
அண்டை மாநிலத்திற்கு
லாரியில் அடிமாடாய்ப்போகிறது
விற்று காசக்கிவந்த
எங்கள்வீட்டு லட்சுமி
2 comments:
கனமான கவிதை
தங்கள் வரவிற்கு மிகுந்த நன்றி கதிர்
Post a Comment