Wednesday, June 9, 2010

விட்டு விலகி
















கத்தும் கன்றுகளைக்கடந்து
பசியபுல்வெளியைக் கடந்து


வைக்கோல் போர்களைக்கடந்து

அருந்திக் குளித்துமகிழ்ந்த

குளத்தைக்கடந்து

வீழ்ந்தமரத்தில்

தான்வாழந்த இடத்தை

வெறித்து நோக்குகிற

ஒரு பறவையைப்போல்

விழி பிதுங்கி நுரைசிதற

அசை போட்டவண்ணம்

அண்டை மாநிலத்திற்கு

லாரியில் அடிமாடாய்ப்போகிறது

விற்று காசக்கிவந்த

எங்கள்வீட்டு லட்சுமி

2 comments:

ஈரோடு கதிர் said...

கனமான கவிதை

ரவிஉதயன் said...

தங்கள் வரவிற்கு மிகுந்த நன்றி கதிர்