Tuesday, June 8, 2010

காற்றின் திசையில்

  









சிற்றோடை

சிற்றோடையின் மீது சிறுஇலை

இலைப்படகின்மீது கட்டெறும்பு

கட்டெறும்பின் வாயில் சிற்றுணவு

சின்ஞ்சிறு பாரத்தோடும்

மெலிதானத் துடிப்போடும்

காற்றின் திசையில்

நகர்ந்தபடி இருக்கின்றது

அதன் பெருவாழ்வு
 
ஆனந்தவிகடனில் வெளியான கவிதை
 
 
 


No comments: