சின்னக்குழந்தை
தன் சின்னச்சின்னப் பாதங்களை
இப்பூமியல் எடுத்துவைக்கிறது
வைக்கிற ஒவ்வொரு அடிக்கும்
அதன் பாதணியிலிருந்து
சீழ்கையொலி எழும்புகிறது
பிஞ்சின் நடை பதற்றம் கண்டு
தாயன்பு தவிக்கிறது
சின்னக்குழந்தை
சிரித்தபடி நடக்கின்றது
சங்கீதத்தின் மீது
உயிர்மை மற்றும்
ஆனந்தவிகடனில் வெளியானகவிதை
No comments:
Post a Comment