Saturday, June 5, 2010











 சின்னக்குழந்தை


தன் சின்னச்சின்னப் பாதங்களை

இப்பூமியல் எடுத்துவைக்கிறது

வைக்கிற ஒவ்வொரு அடிக்கும்

அதன் பாதணியிலிருந்து

சீழ்கையொலி எழும்புகிறது

பிஞ்சின் நடை பதற்றம் கண்டு

தாயன்பு தவிக்கிறது

சின்னக்குழந்தை

சிரித்தபடி நடக்கின்றது

சங்கீதத்தின் மீது
 
 
உயிர்மை மற்றும்ஆனந்தவிகடனில் வெளியானகவிதை

No comments: