Tuesday, November 29, 2011

எறும்பின் தடத்தை







   எறும்பின் தடத்தை
தேடிப்போவேன்
பல நாட்கள்
என்னைத்தேடி
எறும்புகள்வந்தன
ஒர் நாள்.



எல்லா இலைகளையும்
உதிர்த்து விட்டு
நிற்கிறது
ஒரு புத்த மரம்

உனக்குச் சம்மதமெனில்
முயன்று பார்
ஒரு முறை
அரிது அரிது
மானிடராய்ப் பிறப்பது


முதலின்
முதல் தான்
முடிவின்
முடிவு

பிறந்த தினத்திற்கு
மறு தினம்
தேதி காகிதத்தைக்கிழிக்கும் போது
ஒரு வருடமும் சேர்ந்து
கிழிந்து விடுகிறது


              

No comments: