Monday, November 21, 2011

கையளவு நிலத்தில்சிறு குழந்தை










வானளவு பரப்பில்
கையளவு நிலம்

கையளவு நிலத்தில்
இரண்டடி மணற்க்குழி

உறங்கும் பாவனையோடு
இறந்த குழந்தை

தாயின்இடுப்பிலிருந்து
மண்தொட்டிலுக்கு.

யாருக்கும் தீங்கிழைக்காத
ஒரு சுருண்ட புழு

ஒருஈன்ற கனி

ஒருஉலர்ந்த விதை

மேலிருந்து பரிதவிக்கும்
தாயின் ஓலத்தை
செவி மடுக்க,
ஆறுதலைஅளிக்க
 யாருமில்லை


இம்மண்ணின் மீது
நடையிடுகிற
இதய மற்றவர்களின்
காலடியோசைகளை
காதுற்ற படியே

இன்று
மண்ணோடு மண்ணாகிறது
சிறு குழந்தை

2 comments:

Yaathoramani.blogspot.com said...

மண்ணோடு மண்ணாவது
சிறு குழந்தை மட்டுமா ?
படமும் பதிவும் மனம் கனக்கச் செய்து போகிறது
த.ம 1

ரவிஉதயன் said...

ஆம் நண்பரே