Tuesday, January 25, 2011

சாட்சிகள்








ஒன்றையடுத்து ஒன்றாய்
உதிர்கிறது
பழுத்த இலைகள்.

வயதாகி விட்ட தென்கிறாய்
உலர்ந்த அம மரத்தை
நோக்கியபடி.

நஞ்சாகிப்போன அடி மண்ணில்
தன் மூச்சை நெரிக்கிற
வேர்களின் கேவல்
கேட்கிறது எனக்கு.

No comments: