நகரும் பொம்மைகள்,
உருளும் பந்துகள் ,
ஓடும் சிறுமிதி வண்டி
ஒரு வீடு மைதானமாகிறது.
மானைபோல் துள்ளல்,
தவளை போல கனைப்பு
முயலைப் போல் தாவல்
ஒரு வீடு வனமாகிறது .
சிறு செப்பில் மண் சோறு.
பச்சைப் புல் துவையல்,
மழைத்தண்ணி தேநீர்,
ஒரு வீடு மணல்வீ டாகிறது.
மயிலிறகில் கீரிடம்,
கண் மையில் மீசை,
மினுக்கும் அட்டைக்கத்திகள்
ஒரு வீடு அரண்மனையாகிறது.
குழந்தைகள் வசிக்கிற ஒரு வீடு
ஒரு உலகமாகிறது
5 comments:
தினமும் காணும் காட்சிகள்
கவிஞனின் பார்வை
காட்சிகள்
கவிதையாகின்றன:)
அருமைங்க
நன்றிங்க வானம்பாடி
இதுதான் அழகான உலகம்.... நல்ல கவிதைங்க...
அழகான கவிதைங்க.. நன்றி
நன்றிபாலா சி ,மற்றும் ராமசாமி
Post a Comment