இரவில் செவிமடுக்கிறேன்.
தாழந்த குரலில்
முணுமுணுக்கிற வரிகளை
அதுஒரு பாடலல்ல,
விதிகளுக்கு உட்பட்ட
இசையுமல்ல.
அது தன்
நெடிய மௌனத்தை
உடைக்கிறமுயற்சி
சுமைகளைஅகற்றும் ஒருசாதுர்யம்
தற்காலிகமாய்
மூச்சுவிடுவதற்கான
ஒரு போராட்டம்.
உயிர்மையில் வெளியான எனது கவிதை
(அம்மாவுக்குச் சமர்ப்பணம்)
4 comments:
ammaavin isaai yaarralum kavanikkappatuvathillai. kavithai arumai.paaraattukkal.
தங்களின் விமர்சனதிற்கு நன்றி அன்பழகன்
இந்தக் கவிதையில் ஒரு அம்மாவாக என்னையே நான் பார்க்கிறேன்.
.அன்பும் நன்றியும் ஜெயந்தி அம்மா
Post a Comment