Saturday, December 18, 2010

ஆட்டம்

குதி காலயுர்த்தி அதன் விளிம்பில் அமர்ந்தவாறு
கன ரக சாவியொன்றை தரை மண்ணில் கிளறியபடி
களபரிசோதனையாளன்
டாஸ் வென்ற குழு முதலில்
பந்து வீச்சை தேர்ந்து எடுக்கலாம்
ஆட்டத்தின் தொடக்கதிலேயே
விக்கெட்டுகளைச் சாய்க்கலாமென்றும்
பந்து காற்றில் திசை மாறி சுழலுமென்றும்
மட்டையாளர்கள் நன்கு ஆடும் பட்சத்தில்
இக் கணிப்புகள் மாறலாம் என்றும்
தொலைக்காட்சிக்கு பேட்டி தருகிறான்
சிறியவிளம்பர இடைவேளைக்குப் பிறகு
நடக்க இருந்த ஆட்டத்தைக் காண
ஆவலோடிருந்த தருணத்தில்
ஏற்கனவே தொடங்கியிருந்தது
ஆடு களத்தில்
மழையும், காற்றும் தனது ஆட்டத்தை

1 comment:

arasan said...

ம்ம்ம்ம் ... அசத்தலான வரிகள் ...