Wednesday, December 15, 2010

பொம்மையின்குழந்தை

தன்னோடு வைத்து விளையாட
அதற்க்கு தலைசீவி உடை அணிவிக்க
மடியமர்த்தி சோறுஊட்ட
மிதி வண்டி பயணத்தில் பின்அமர்த்த
இறுகி அணைத்துறங்க
பிரியத்தில் முத்தமிட
கோபத்தில் வீசி எறிய
ஒரு குழந்தை இவ்வுலகில்
தன்னுடையது என்று சொந்தமாகிக்கொள்ளவிரும்பும்
ஒரு குழந்தைபொம்மையை  
செய்கிறான்பொம்மை தயாரிப்பவன்
அதில் தன் இறந்துபோன மகனின்
சாயலிருப்பதைக்கண்டு 
கண்ணீர் உகுக்கிறான்   

1 comment:

arasan said...

வலிகள் நிறைந்த வரிகள் ... வாழ்த்துக்கள் தொடருங்க