அதனை
முதலில் சந்தேகிக்கிறோம்
கழுகின் கண்களில் பார்க்கிறோம்
கதவு திறந்து விடுகிறோம்
எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்
எத்தனையோ நடந்துவிட்டது என்று, அதற்காக
எதைஎதையோ செய்கிறோம்
எத,எதற்க்கோ உடன் படுகிறோம்
இறுதியில்
தளர்ந்த மூச்சை விடுகிறோம்
பிறகு
அதன் நிழல்பிரதிகளாய் மாறுகிறோம்
No comments:
Post a Comment