Sunday, June 10, 2012

நாம் பறவை மரம்




கிளைஅதிர
எழும்பிப்பறக்கின்றது பறவை

கிளையிலிருந்து
உதிர்கின்றது ஒரு இலை,
அதன்சிறகிலிருந்து
உதிர்கின்றது ஒரு இறகு

இலை
நமது
இருப்பிற்கான ரசீது
இறகு
நாம்
பறப்பதற்கான பயணச்சீட்டு

No comments: