Thursday, May 10, 2012

அன்புள்ள அன்பிலார்




நெடுங்காலமாகியும்

அன்புள்ள
எனக் கடிதமெழுதஆரம்பிக்கும்
நாம்
சிலவிசயங்களை
தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

அன்புஎன்று
மகத்தான பொய்யை
முதலில்
நாம்எழுதத்தொடங்குகிறோம்.

பெரும்பாலும்
அன்பு இல்லாதவற்க்கே
அதை எழுதுகிறோம்.

நம்மிடம்
அதுஇருப்பதுபோல்
பாவித்துக்கொள்கிறோம்

அது இருப்பதால்தான்
இப்பூமி
இன்னும்இயங்குகிறது
எனச்சொற்களால்
நிர்மாணிக்க முயலுகிறோம்
.

No comments: