Monday, September 6, 2010

நீர் வெளியில் சிலகவிதைகள்










நிரம்பிய கோப்பைகள்


நுரை வழியத் ததும்பி

மகிழ்கின்றன



காலி கோப்பைகள்

கல,கலத்து

கலவரப்படுகின்றன.







வருகையாளார் இன்றி

கிடக்கிற உணவு மேசையினடியில்

சிற்றெறும்புகள்

முடித்துக்கொள்கின்றன

தனது சிற்றுணவை.







நுரை ததும்ப குவளைகளிருந்த மேசைக்கு

மெதுவாக

நீந்தி வருகின்றன

இரு பொறித்த மீன்கள்.

No comments: