. பறவைகள் கூடுதிரும்புகின்றன
குஞ்சுகளுக்கு இரையோடு
குழந்தைகள் வீடுதிரும்புகின்றன
தாய்க்குச் சொல்லக் கதைகளோடு.
.பொம்மைகளோடும்
பேசுகின்றன குழந்தைகள்
குழந்தைகளோடும்
பேசுவதில்லை நாம்.
.அடித்த தாயையே
கட்டிக்கொண்டழுகிறது
ஆறுதல் சொன்னவர்களை
விட்டுவிலகியோடுகிறது.
.குழந்தைகள் உறக்கத்தில் முணுமுணுக்கின்றன
தேவதைகளின் கதைகளை வாசிக்கின்றன.
கீற்று.காமில் வெளியான கவிதை
No comments:
Post a Comment