Thursday, October 21, 2010

காணாமல் போகிறவர்கள்

காணாமல் போகிறவர்களை
எங்கேயிருந்து தேடத்துவங்குவது என்று யாருக்குமே தெரிவதில்லை

 காணாமல் போகிறவர்கள் அகப்படாதபோது
தேடிப்போனவர்கள் தொலைந்துபோன
மனோபாவத்துடன்  திரிகிறார்கள்

காணாமல் போகிறவர்கள்
யாராலோ தொலைக்கப்படுகிறார்கள்?

வீடு திரும்ப முயலாதவர்ளே     
தொலைந்து போகிறார்கள்

காணாமல் போகிறவர்கள்
எதையோ தேடித்தொலைகிறார்கள்

காணாமல் போகிறவர்கள் தேடுபவர்களுக்கு
மர்மத்தடங்களை திறந்து விடுகிறார்கள்

வெகு நாட்க்கள்வீடு திரும்பாதவர்கள் 
பலவந்தமாக இறந்தவர்கள் பட்டியலில் இணைக்கப் படுகிறார்கள்.

 காணாமல் போகிறவர்கள் 
மண்ணில் விழுந்த விதையாகிறார்கள்
பிறகு  தளிர் போல
நினைவுகளில் தலைகாட்டுகிறார்கள்

No comments: