Wednesday, October 20, 2010

உறுமீன் வர காத்திருக்கும் கொக்கு

வாகன நதி பாய்ந்தோடுகிறது 
ஒரு கரையிலிருந்து
மீனைப்போல நீந்தி
மறுகரையைத் தொடுகிறாள் மகள்
ஒற்றைக் கால் தவமிருந்து
கொக்கைப்போல் கவ்விக்கொள்கிறாள் தாய்

No comments: