Thursday, October 14, 2010

சாவித்திரிக்கு வந்து கொண்டிருக்கிற காதல் கடிதங்கள்






உங்களுக்கு சாவித்திரியை தெரியுமா ?


என்று கேட்டால் அடிக்கவருவீர்கள்.



மூக்கு விடைத்து, உதடு சுழித்து

துள்ளத்துடிக்கும் கண்களுடன்

அவர் உங்களுடன் பேச ஆரம்பித்தால்

அந்த நிமிடமே உங்கள் வாழ்வின்

உன்னதத் தருணமென்று உணர்வீர்கள்

முடியாத அவரின் யவனமும், அதிஉச்சத்துள்ளலும்

அருள் பாலிக்கிற அழகும்

எல்லா ஆடவரையும் அடி பணியச்செய் யும்

மலர்ந்தும்,மலராத பாதி மலர் போல பாடலை

எப்போது செவி மடுப்பினும்

அதே ஆடவரை மடி சாய்த்து அழ வைத்துவிடும்

ஒரே கணத்தில் காதலியாகவும்,தோழியாகவும்

தோற்ற மயக்கம் தருவார்.



சாவித்திரியின் சாயலோடு பிறந்த எங்கள் சாவித்திரிக்கு வளரிளம் பருவதிலிருந்து வந்து கொண்டிருக்கிறது

.எண்ணற்ற காதல் கடிதங்கள்

அவள் எதற்கும் பதிலிருத்தியதில்லை

புத்தகங்கள் ஆக கூடினும்

காதல் கடிதங்களின் சுமையை சுமந்துநடந்தாள்



சாவித்திரியின் சாயலோடு சாவித்திரிக்கு

இப்பொழுது வயது நாற்பது



ஆண்டுகள் பலவாகினும்

கதவு திறந்து அவள் வெளிப்படும் தருணத்திற்க்கு

நினைவுகளின் அழுத்தம் தாளாது

தினம், தினம் அவள் வசிக்கும் தெருவில்

திரிந்து கொண்டிருக்கிறார்கள் சுந்தர புருஷர்கள்



No comments: