Friday, October 15, 2010

உயிரோசையில் வெளிவந்த கவிதை

• உயிரோசையில் வெளிவந்த கவிதையை இங்கு


பகிர்ந்துக்கொள்ள விரும்புகின்றேன். நன்றி




ஒரு இலை கூட அசையவில்லை



மரம் உறங்குகிறது



ஒரு இறகு கூட விரியவில்லை



பறவை உறங்குகிறது



இழுபட்ட கவணின்பின்னே



விழிகள் மட்டும் விழித்து கொண்டிருந்தது



*



பிஞ்சுக் கன்னத்தில்



பதிந்த விரல்கள்



விம்முகிற குழந்தையிடம்



கேட்டுக் கொண்டிருந்தேன்



எப்போதும் பெற முடியாத மன்னிப்பை



*



கட்டைவிரல்



ஆள்காட்டிவிரல்



சுண்டுவிரல் என்று



சொல்லிக்கொண்டு வந்தவள்



மோதிரவிரலை மட்டும்



அடகு விரலென்றாள்.



*



இறந்த கட்டெறும்பை



இரைக்கு இழுத்துசெல்லும்



சிற்றெறும்புகளுக்குத்



தெரியவில்லை



தன் மூதாதையர்களைப் பற்றி



*



வீடற்றவனின்



மனைவி மட்டும்



விளித்துக்கொண்டிருந்தாள்



எங்க வீட்டுக்காரரென்று

1 comment:

ரவிஉதயன் said...

நன்றி அருட் புதல்வன்