Monday, October 11, 2010

முடிந்த கோடையில்

நீரைத்தொலைத்த ஆழ்துளைக்கிணறுகள்


பெருமூச்சை தரைக்குஅனுப்புகின்றன

குடிக்க கேட்ட வாய்க்குக் கவிழ்ந்துகொள்கின்றன காலிக்குடங்கள்.

உலர்ந்த நாக்குகள் உதிர்ந்து நத்தைபோல் ஊர்கின்றன.

நிரம்பிய குளங்களோடு வாழ்ந்த பெண்டிரை

காலிக்குடங்கள் கலவரப்படுத்துகின்றன

கையளவு நீரையள்ளி

தண்ணீருக்காக பிரார்த்தனைசெய்கிறாள் சிறுமி ஒருத்தி

செவி மடுத்த இறைவன்

அவசரமாய் உருமாறிவருகிறான்

மாநகராட்சி குடி நீர் திறப்பளானாக

No comments: